Thu 13 Aug 2009 |
Ramanusa Nootrandadhi - 3 |
|
இராமாநுச நூற்றந்தாதி - 3
பேரியல்நெஞ்சே அடிபணிந்தே னுன்னை* பேய்ப்பிறவிப்
பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்தி* பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை யிராமாநுசமுனிக் கன்புசெய்யும்
சீரியபேறுடையார்* அடிக்கீழ்ழென்னைச் சேர்ந்ததற்கே.
பரம நீசர்களோடு எனக்கிருந்த ஸம்ஸர்க்கத்தைப் போக்கடித்து, ஒப்பற்ற குணசாலியான எம்பெருமானாருடடய திருவடிகளில் ப்ராவண்யமாகிற பரமபுருஷார்த்தத்தைப் பெற்றுள்ள ஆழ்வான் போல்வாருடடய திருவடிகளின் கீழே என்னைக் கொண்டு சேர்த்த நெஞ்சே! இப்பெருநன்றிபுரிந்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? “தலையில்லா கைம்மாறிலேனே” என்றாற்போலே உன்னைத் தலையால் வணங்குவது தவிர வேறொறு கைம்மாறு நான் செய்கிகில்லேன் என்றாரயிற்று. பூரியர் = இழிப்பிறப்பாளர். புலர்த்துதல் – உலரச் செய்தல்; அதாவது போக்கடித்தல். பொருவு – ஒப்பு.
“இராமாநுசனடிக் கன்புசெய்யுஞ் சீரிய பேறுடையார்” என்றவிடத்து ஸ்ரீராமாநுஜ பக்தர்களெல்லாரையும் விவக்ஷிக்கிறார் என்றாலும், கூரத்தாழ்வானை விசேஷித்துக் கருதுகின்றாரென்றலும் ஒக்கும்.
|