Banner
You are here: Home Vyakyanam Ramanusa Nootrandhadhi Ramanusa Nootrandadhi - 2

Thu

13

Aug

2009

Ramanusa Nootrandadhi - 2

email print
இராமாநுச நூற்றந்தாதி - 2

கள்ளார்பொழில் தென்னரங்கன்* கமலப்பதங்கள் நெஞ்சில்
கொள்ளாமனிசரை நீங்கி* குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாதவன்ப னிராமாநுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென்னெஞ்சு* ஒன்றறியேனெனக்குற்ற பேரியல்வே.


கள் ஆர் பொழில் தென் அரங்கன்
தேன் நிறைந்த சோலைகளையுடைய தென் திருவரங்கத்திலே பள்ளிகொள்ளும் பெருமானுடைய
கமலம் பதங்கள்
தாமரை போன்ற திருவடிகளை
நெஞ்சில் கொள்ளா
தமது நெஞ்சிலேவையாத
மனிசரை நீங்கி
மனிதர்களை விட்டொழித்து
குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன்
திருமங்கை மன்னனுடைய திருவடிகளிலே என்றும் விட்டு நீங்காத பக்தியையுடையனான
இராமாநுசன்
எம்பெருமானாருடைய
மிக்க சீலம் அல்லால்
சிறந்த சீலகுணத்தைத் தவிர
ஒன்று
வேறொன்றையும்
என் நெஞ்சு உள்ளாது
எனது நெஞ்சானது நினைக்கமாட்டாது
(இவ்வாறாக)
எனக்கு உற்ற பேர் இயல்வு
எனக்கு ஸித்தித்ததொரு சிறந்த ஸ்வபாவத்திற்கு
ஒன்று அறியேன்
ஒரு காரணத்தையும் அறிகின்றிலே


ஸ்ரீரங்கநாதனுடைய திருவடித்தாமரைகளை நெஞ்சாலும் நினையாத பாவிகளோடு நெடுங்காலம் பழகிக் கிடந்த என் நெஞ்சானது இன்று அப்பாவிகளோடு உறவை ஒழித்துவிட்டு, திருமங்கையாழ்வாருடைய திருவடிகளியே அநவரதம் இறைஞ்சுமவரான எம்பெருமானாருடைய சிறந்த சீலகுண மொன்றையே சிந்தியா நின்றது; இப்படிப்பட்டதொரு பெருந்தன்மை எனக்கு நேர்ந்ததற்குக் காரணம் அவ்வெம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபாகடாக்ஷமேயொழிய வேறொன்றுண்டாக நானறிகின்றிலேன் என்றவாறு.                                       
Last Updated ( Thursday, 13 August 2009 11:39 )